மக்கள் நிம்மதி மக்களை மிரட்டிய காட்டெருமை

திருப்புத்தூர், அக். 12: கிராமத்தில் காட்டெருமை புகுந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே கும்மங்குடி, மணமேல்பட்டி, ஊர்க்குளத்தான்பட்டி, நகர வயிரவன்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த 3 நாட்களாக காட்டெருமை உலா வருகிறது. ஒற்றை காட்டெருமையாகத் திரியும் இதனை கிராம மக்கள் ஊருக்குள் வரவிடாமல் ஆற்றுப்பகுதி, கண்மாய்ப் பகுதிகளில் திருப்பி விரட்டி விடுகின்றனர். இருப்பினும் நேற்று வயிரவன்பட்டி கிராமத்திற்குள் புகுந்த காட்டெருமை அமைதியாகக் காணப்பட்டது. தெருக்களைச் சுற்றி வந்த இந்த காட்டெருமை மீண்டும் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Related Stories: