காரியாபட்டி, அக்.12: காரியாபட்டியில் 2 ஆண்டுகளாக எரியாமல் கிடந்த ஹைமாஸ் விளக்குகள் தினகரன் செய்தி எதிரொலியாக சரி செய்யப்பட்டன.
காரியாபட்டியில் வாகன ஓட்டிகள், மக்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. இதில் காரியாபட்டி பஸ் நிலையம், முக்குரோடு, செவல்பட்டி முக்கு, கல்குறிச்சி நான்கு வழிச்சாலை, ஆவியூர் போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்குகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பழுதாகி எரியாமல் இருந்தது.