மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்து பலி

காரைக்குடி, அக்.12: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி, பாலாஜி நகரை சேர்ந்தவர் ரங்கநாதன் மனைவி பங்கஜம் (80). நேற்று காலை பங்கஜம் வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றுக்குள் நிலைதடுமாறி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொண்டு செல்லும் வழியில் பங்கஜம் உயிரிழந்தார். இதுகுறித்து பங்கஜத்தின் மகன் ஜோதி கொடுத்த புகாரின் பேரில் காரைக்குடி தெற்கு போலீசார் வாக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: