திருமங்கலம், அக்.12: திருமங்கலத்தில் காதலித்த பெண்ணின் மீது ஆசீட் வீசுவேன் என மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், விக்கிரமங்கலத்தை சேர்ந்தவர் பிரேம்குமார்(22). இவர் திருமங்கலத்தில் உள்ள தனியார் மெட்ரிக்பள்ளியில் படிக்கும்போது உடன் படித்த மாணவியை காதலித்துள்ளார். இருவரும் வெவ்வேறு மதத்தினை சார்ந்தவர்கள் என்பதால் மாணவியின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். படித்து முடித்துவிட்டு இருவரும் தற்போது வேறுவேறு பகுதிகளில் பணியில் உள்ளனர். இந்நிலையில் பிரேம்குமார் காதலித்த பெண்ணிற்கு சமீபத்தில் வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.