மேலூர் அருகே நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப் பாய்ந்த காளைகள்

மேலூர், அக். 12: மேலூர் அருகே மாட்டு வண்டி பந்தய ஆர்வலர்கள் நடத்திய இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் காளைகள் சீறி பாய்ந்து சென்றது.

மேலூர் அருகே முசுண்டகிரிபட்டியில் மாட்டு வண்டி பந்தய ஆர்வலர்கள் நடத்திய மாட்டு வண்டி பந்தயம் நேற்று நடைபெற்றது. பெரிய மாடு மற்றும் சிறிய மாடு என 2 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. மேலூர் கத்தப்பட்டி அருகே முசுண்டகிரிபட்டியில் இருந்து இடையப்பட்டி வரையிலான சாலையில் போட்டிகள் நடைபெற்றது. 12 கிமீ. எல்லையாக கொண்ட பெரிய மாடுகள் பிரிவில் மொத்தம் 13 ஜோடி மாடுகள் கலந்து கொண்டது.

இதில் முதல் பரிசான ரூ.15 ஆயிரத்தை புதுப்பட்டியை சேர்ந்த சின்னச்சாமியின் மாடு பெற்றது. 6 கி.மீ., தூரம் எல்லையாக கொண்ட சிறிய மாடுகள் பிரிவில் மொத்தம் 17 ஜோடி மாடுகள் கலந்து கொண்டது. வெற்றிபெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு, கேடயம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. இத்துடன் மாட்டு வண்டிகளை ஓட்டிய சாரதிகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இப்பந்தயங்களை ரோட்டின் இருபுறமும் நின்று பொதுமக்கள் கண்டு களித்தனர்.

Related Stories: