தீக்குளித்து வாலிபர் சாவு

விக்கிரவாண்டி, அக். 12:  விக்கிரவாண்டி அருகே பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டபாணி மகன் சதீஷ்(30), தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி வந்துள்ளது. தொடர்ந்து சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை தன்மேல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து தீயை அணைத்து அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் ஆகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி

வருகின்றனர்.

Related Stories: