பேருந்து நிழற்குடைக்குள் பஸ்கள் நின்று செல்ல நடவAடிக்கை

வானூர், அக். 12: வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் அனைத்து பேருந்து

களும் செல்லும் வகையில் பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டு கடந்த சில மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்டது. அதிலிருந்து பேருந்துகள் இந்த நிழற்குடை

வழியாக சென்று வந்துகொண்டிருந்தது.

இந்நிலையில் நிழற்குடை வழியாக பேருந்துகள் செல்லாமல் வெளி

யிலேயே சாலையில் நிறுத்தி பயணிகளை இறக்கியும் மற்றும் ஏற்றியும் செல்கின்றனர். இதனால் பேருந்து நிழற்குடை பகுதியில் சிலர் இருசக்கர வாகனங்களை நிறுத்தியுள்ளனர். மேலும் சாலையில் பேருந்துகள் நின்று செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துக்களும் நடக்கின்றது. எனவே சரியான முறையில் பேருந்துகள் நிழற்குடை உள்பகுதியில் சென்று பயணிகளை இறக்கிவிட்டும், ஏற்றிசெல்லவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: