போக்குவரத்து விதிமீறல் 38 ஓட்டுனர்கள் மீது வழக்கு

உளுந்தூர்பேட்டை, அக். 12:

உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி ராஜேந்திரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ஷாகுல்அமீது மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், ஏழுமலை, ஆதி மற்றும் போலீசார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது குடிபோதையிலும், லைசென்ஸ் இல்லாமலும், உரிய ஆவணங்கள் இன்றியும் இருசக்கர மற்றும் கனரக வாகனங்களை ஓட்டிச் சென்ற 38 வாகன ஓட்டுனர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து போக்கு வரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.

Related Stories: