பொதுக்கூட்டம் நடக்கும் இடம்: எம்எல்ஏ ஆய்வு

உளுந்தூர்பேட்டை, அக். 12: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் வரும் 17ம் தேதி, அதிமுக 47ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் கலந்து

கொள்ள உள்ள இந்த பொதுக்கூட்டத்திற்கான இடம் தேர்வு செய்யும் பணி நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

இதை தொடர்ந்து விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு எம்எல்ஏ தலைமையில் அதிமுக நிர்வாகிகள் சேலம் ரோடு ரவுண்டானா பகுதியில் தேர்வு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது டிஎஸ்பி ராஜேந்திரன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் மணிராஜ், ராஜசேகர், நகர செயலாளர் துரை, முன்னாள் துணை சேர்மன் சாயிராம், முன்னாள் கவுன்சிலர் ராமலிங்கம், சக்திவேல், குணசேகரன், கஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: