புதுச்சேரி, அக். 12: புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை பாஜகவினர் நேற்று காலை திடீரென முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ., தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் நிர்வாகிகள், கட்சியினர், பெண்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஊழல், முறைகேடு நடப்பதாக கூறி, இதனை கண்டித்து இப்போராட்டம் நடந்தது.முன்னதாக, பாஜக நிர்வாகிகள், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரகு
நாதனை சந்தித்து குறைகளை தெரிவித்தனர். அதற்கு ரகுநாதன், ஊழியர்களுக்கு 10 மாதமாக சம்பளம் இல்லை, தீபாவளி போனஸ் கடந்தாண்டு தரவில்லை. நிதி இல்லாததால் தான் இந்த நிலை என கூறினார். நாம் குறைகளை கூறினால், பதிலுக்கு அதிகாரி நம்மிடமே குறைகளே கூறியதால் பாஜகவினர் அதிர்ச்சியடைந்தனர்.தொடர்ந்து சாமிநாதன் எம்எல்ஏ., நிருபர்களிடம் கூறும்போது, விவசாயி