வேலூர், அக்.12: வேலூர் மத்திய சிறையிலிருந்து 9வது கட்டமாக 9 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் நேற்று காலை விடுதலை செய்யப்பட்டனர்.தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். அதன்படி வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள் இதுவரை 8 கட்டமாக 104 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.