9 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை வேலூர் மத்திய சிறையில் இருந்து 9வது கட்டமாக

வேலூர், அக்.12: வேலூர் மத்திய சிறையிலிருந்து 9வது கட்டமாக 9 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் நேற்று காலை விடுதலை செய்யப்பட்டனர்.தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். அதன்படி வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள் இதுவரை 8 கட்டமாக 104 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், 9வது கட்டமாக ஆயுள் தண்டனை கைதிகள் அர்ஜூனன், சாம்ராஜ், சிவகுமார், சிவலிங்கம், கோவிந்தராஜ், அழகர், முருகன், பெருமாள், தனபால் ஆகிய 9 பேரை நேற்று காலை 6.45 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். அவர்களை பார்த்த உறவினர்கள் கட்டித்தழுவி வரவேற்று அழைத்து சென்றனர். இதுவரை மொத்தம் 113 பேரை சிறைத்துறை நிர்வாகம் விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: