புழல் காந்தி பிரதான சாலையில் பைக் மீது லாரி மோதி வாலிபர் சாவு: டிரைவருக்கு வலை

புழல், அக். 12: புழல் காந்தி பிரதான சாலையில் பைக் மீது சிமென்ட் கலவை லாரி மோதியதில் வாலிபர் உடல் நசுங்கி, பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.புழல், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகன் கண்ணப்பன் (19). பிளஸ் 2 முடித்துள்ளார். தற்போது வேலை தேடி வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் புழல் காந்தி பிரதான சாலையில் கண்ணப்பன் பைக்கில் சென்றபோது எதிரே வந்த தனியார் சிமென்ட் கலவை லாரி அவர் மீது மோதியது. இதில் கண்ணப்பன் பைக்குடன் தூக்கி வீசப்பட்டு, லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.தகவலறிந்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கண்ணப்பன் சடலத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: