கோரமங்கலம் காலனியில் ₹7 லட்சத்தில் அங்கன்வாடி மையம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருத்தணி,  அக். 12: திருத்தணி ஒன்றியம், கோரமங்கலம் காலனியில் ₹7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள புதிய அங்கன்வாடி மையத்தை மாவட்ட கலெக்டர் திறந்து வைத்தார். திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் கோரமங்கலம் காலனியில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து, அப்பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டும் பணிகள் நடைபெற்று, கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. இந்நிலையில் கோரமங்கலம் காலனியில் நேற்று முன்தினம் புதிய அங்கன்வாடி மைய திறப்பு விழா நடந்தது.இதில், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கலந்து கொண்டு அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன், திருத்தணி தாசில்தார் செங்கலா, ஒன்றிய ஆணையர் லட்சுமணன், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன், முன்னாள் ஆவின் தலைவர் சந்திரன், அங்கன்வாடிகள் ஒருங்கிணைப்பாளர் திவ்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: