கன்னிகைப்பேர் கிராமத்தில் சமூக முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் கூட்டம்: மத்திய அரசு பிரதிநிதிகள் பங்கேற்பு

ஊத்துக்கோட்டை, அக்.12: கன்னிகைப்பேர் கிராமத்தில், தேசிய அளவிலான சமூக முன்னேற்றம் குறித்து கள ஆய்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில், மத்திய அரசு  பிரதிநிதிகள் பங்கேற்றனர்.பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் தமிழக வாழ்வாதார இயக்கம் மற்றும் எல்லாபுரம் ஒன்றியத்தின் சார்பில் மனநல திட்டம், கிராம ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு ஆகியவற்றால் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த தேசிய அளவிலான கள ஆய்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் வீரண்ணன் தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் (பொ) வின்சென்ட், மாநில வல்லுநர் ரவி, உதவி திட்ட அலுவலர் வீரமணி, களப்பகுதி பணியாளர்கள்  உஷாராணி, ராமதாஸ், ஜோதிர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளோரிமதி அனைவரையும் வரவேற்றார்.இதில் ஆந்திரா, மிசோராம், உத்திரபிரதேசம், பீகார், ஒடிசா, புதுடெல்லி ஆகிய பகுதிகளில் இருந்து மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சகத்தின் சார்பாக பிரதிநிதிகள் பங்கேற்றனர். தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய அவர்கள், மத்திய அசின் மனநல திட்டம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு போன்ற திட்டங்களால் கிராமங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து கேட்டறிந்தனர். இறுதியில் பிரவீணா நன்றி கூறினார்.

Related Stories: