திருப்போரூர், அக்.12: திருப்போரூர் அருகே காலவாக்கத்தில் எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த வீரபத்திரன் மகன் கோகுல் (22) என்பவர் பொறியியல் (சிவில்) பாடத்தில் நான்காம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் தங்கி இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரியில் நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூவில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இறுதியாண்டில் முடிக்க வேண்டிய புராஜக்ட் மற்றும் சிறு தேர்வுகளை நேற்று முன்தினம் அவர் முடித்திருந்தார்.விரைவில் விடுதி அறையை காலி செய்து விட்டு வீட்டுக்கு வருவதாக அவருடைய தந்தையிடம் செல்போனில் கூறி இருந்தார். இந்நிலையில் நேற்று காலை அவரது தந்தை வீரபத்திரன் தனது மகன் கோகுலுக்கு போன் செய்திருந்தார். செல்போனை கோகுல் எடுக்காததால் கல்லூரி நிர்வாகத்திற்கு அவர் தகவல் கூறினார்.