பா.ம.க. செயற்குழு கூட்டம்

செய்யூர், அக். 12: காஞ்சி தெற்கு மாவட்ட பாமக சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சி இடைக்கழிநாடு பேரூராட்சி கடப்பாக்கத்தில் நடந்தது. வன்னியர் சங்க மாவட்ட தலைவர் கணபதி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்ட செயலாளர் கோபாலகண்ணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாதம்தோறும் அனைத்து ஒன்றியங்களிலும் மாவட்ட செயற்குழு கூட்டம், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும் என்றும், இளைஞர்கள் மற்றும் வாலிபர்களுக்கு தனித்தனி பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  தொடர்ந்து இப்பேரூராட்சிக்குட்பட்ட கடப்பாக்கம், தழுதாளிக்குப்பம், ஆலம்பரைகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பா.ம.க., கட்சியின்  கொடிகள் ஏற்றிவைத்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். அதன்பின் கடப்பாக்கம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ஏற்படுத்தப்பட்டிருந்த ஆட்டோ ஸ்டாண்டின் திறப்பு விழா நடைபெற்றது.

Related Stories: