மின்சார ரயிலில் பாட்டுபாடி ரகளை தட்டிக்கேட்ட ரயில்வே போலீஸ் மீது தாக்குதல்: சட்டக்கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு வலை

செங்கல்பட்டு, அக்.12: சிங்கப்பெருமாள் கோயில் ரயில்நிலையத்தில் செங்கல்பட்டு ரயில்வே போலீஸ் சந்திரசேகர் (32) என்பவர் நேற்று முன்தினம் மாலை சுமார் 5 மணியளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்க்கமாக வந்த மின்சார ரயிலில் செங்கல்பட்டு சட்டக்கல்லூரி  மாணவ, மாணவிகள் தாளம் போட்டு பாட்டுப்பாடி கொண்டும் இருந்தனர். இது மற்ற பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில், மின்சார ரயில் சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையத்தில் வந்து நின்றதும், அதில் இருந்த சக பயணிகள் பிளாட்பாரத்தில் இருந்த காவலர் சந்திரசேகரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அப்போது, சந்திரசேகர் மாணவர்களை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில், இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மாணவர்கள் காவலர் ராஜசேகரை தாக்கி கிழே தள்ளிவிட்டு அதே ரயிலில் சென்றுவிட்டனர். இதுகுறித்து சந்திரசேகர் செங்கல்பட்டு ரயில்வே போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர்கள் 4 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: