சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் வாலிபரிடம் பணம் திருடிய 3 பெண்கள் கைது

சேலம், அக்.11: சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் வாலிபரிடம் பணம் திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் வீரமணி (26). இவர் நேற்று, சேலம் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு டவுன் பஸ்சில் வந்து இறங்கியுள்ளார். அப்போது அவர் அருகே 3 பெண்கள் வந்துள்ளனர். அவர்கள், நைசாக வீரமணியின் பாக்கெட்டில் இருந்து ரூ1000 பணத்தை திருடினர். அதை கவனித்து, 3 பெண்களையும் அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர். இதுபற்றி டவுன் குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வந்து, 3 பெண்களையும் மீட்டு விசாரித்தனர். அதில் அவர்கள், தஞ்சாவூர் வண்டிகாரன்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சாந்தி (37), ரவி மனைவி சாவித்திரி (48), கார்த்திக் மனைவி ராஜேஸ்வரி (49) எனத்தெரியவந்தது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, பணம் திருடிய 3 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: