சேலம், அக்.11: சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் வாலிபரிடம் பணம் திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் வீரமணி (26). இவர் நேற்று, சேலம் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு டவுன் பஸ்சில் வந்து இறங்கியுள்ளார். அப்போது அவர் அருகே 3 பெண்கள் வந்துள்ளனர். அவர்கள், நைசாக வீரமணியின் பாக்கெட்டில் இருந்து ரூ1000 பணத்தை திருடினர். அதை கவனித்து, 3 பெண்களையும் அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர். இதுபற்றி டவுன் குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.