சேலம், அக்.11: சேலம் அருகே செல்போன் வாங்கியதை தாய் கண்டித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் லக்கம்பட்டி குமரன் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் விஜயா. இவரது கணவர் மாது. கடந்த 22 வருடங்களுக்கு மாது முன்பு இறந்து போனார். அவருடைய தம்பி குமாரை விஜயா 2வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய மகள் இளவரசி (19). இந்நிலையில் குமாரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். இளவரசி மேட்டூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.