ஆட்டையாம்பட்டி, அக்.11: ஆட்டையாம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களின் படைப்பு திறனை மேம்படுத்தும் வகையில், அறிவியல் மற்றும் கணித கண்காட்சி நடைபெற்றது. அறிவியல் மன்ற பொறுப்பாளர் சாந்தகிருஷ்ணன் வரவேற்றார். பள்ளியின் தலைமை ஆசிரியை யோகேஸ்வரி தலைமை வகித்தார். விவேகானந்தா பாலமந்திர் பள்ளி முதல்வர் தேன்மொழி குத்துவிளக்கேற்றினார். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துகுமரேசன், கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் பிடிஏ தலைவர் மனோகரன், பொருளாளர் திலகவதி ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.