திருச்சி, அக்.11: திருவெறும்பூர் வருவாய்துறை மற்றும் காவல்துறை சாபில் மணல் கடத்தல் தடுப்பு விழிப்பணர்வு பேரணி நமது மண், நமது மானம், நமது உரிமை என்ற தலைப்பில் கிளியூரில் இருந்து பனையகுறிச்சி வரை நடந்தது. திருச்சி ஆர்டிஓ அன்பழகன் தலைமை வகித்தது பேரணியை துவக்கி வைத்து பேசியதாவது: ஆறு, ஏரி, ஓடைகளில் மணல் அள்ளுவதால் கரை அரிப்பு ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படும். மணல் திருட்டை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார். திருவெறும்பூர் டிஎஸ்பி சேகர் முன்னிலை வகித்தார். காவிரி மற்றும் காட்டாற்று வாரிகளில் மணல் எடுப்பது சட்ட விரோதமாகும். நமது சந்ததிகள் வாழ மணல் வளத்தை பாதுகாத்து நீர்வளத்தை பாதுகாப்பது நமது கடமை.