திருச்சி ரயில் நிலையத்தில் செல்போன் திருடிய வாலிபர் கைது

திருச்சி, அக்.11: திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையத்தில் பெண் பயணியிடம் செல்போன் திருடிச் சென்ற வாலிபர் திருட வந்தபோது போலீசார் வாலிபரை விரட்டி பிடித்து கைது செய்தனர். திருச்சி ரயில்வே ஜங்ஷனில் நேற்றுமுன்தினம் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரை சேர்ந்த மணிமொழி என்பவர் காத்திருப்பு அறையில் ரயிலுக்காக காந்திருந்தார். அப்போது அவரது செல்போனை மர்மநபர் ஒருவர் கவனத்தை திசை திருப்பி திருடிச்சென்றுவிட்டார். இது குறித்து மணிமொழி ரயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அங்குள்ள சிசிடிவி ஆய்வு செய்து அதில் பதிவான நபரின் பதிவை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை அதே வாலிபர் ரயில்நிலையத்திற்கு வந்தபோது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அடையாளம் கண்டு பிடிக்க முயன்றனர். இதனால் தப்பி ஓட முயன்ற வாலிபரை போலீசார் விரட்டி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திருச்சி புத்தூர் பாத்திமாநகரைச் சேர்ந்த ராஜா மகன் ராஜ்குமார்(22), நேற்றுமுன்தினம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பெண் பயணியிடம் செல்போன் திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரிடமிருந்து செல்போனை மீட்ட போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

Related Stories: