தொழில் துவங்கலாம் என கூறி ரூ.9.25 லட்சம் மோசடி 2 பேர் மீது வழக்கு

திருச்சி, அக். 11: திருச்சி சுப்ரமணியபுரம் இந்திராகாந்தி நகரை சேர்ந்தவர் உஷாராணி. இவர் திருச்சி ேஜஎம் 2 நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், எனது கணவர் ரவிகுமார் கடந்த 2009ல் மரணமடைந்தார். அதன்பின்னர், எனக்கு அறிமுகமான கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த சித்ரா என்பவர் சுயதொழில் செய்து முன்னேறலாம் என கூறி பணம் கேட்டார். அதன்பின், தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவரை அறிமுகப்படுத்தினார். இதையடுத்து கடந்த 2009ல் தொழில் துவங்குவதற்காக ரூ.9.25 லட்சம் பணம் வழங்கினேன்.

ஆனால் பணத்தை பெற்ற இருவரும் தொழில் துவங்காமல் என்னை மோசடி செய்தனர். பணத்தை திருப்பி கேட்ட போது தரமறுத்து மிரட்டினர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்ைக எடுக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். விசாரித்த மாஜிஸ்திரேட் வழக்குபதிந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேர் மீது வழக்குபதிந்த மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: