திருச்சி ஏர்போர்ட் சிஐஎஸ்எப் வீரர்களுக்கு பயிற்சி

திருச்சி, அக்.11: திருச்சி ஏர்போர்ட்டில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வீரர்களுக்கு புத்துணர்வு மற்றும் செயலாக்கம் குறித்த கருத்தரங்கம் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் திருச்சி ஏர்போர்ட்டில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு புத்துணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துணை கமிஷனர் அபிலாஷ்குமார் தலைமை வகித்தார். உதவி கமிஷனர் மகேஸ்குமார் முன்னிலை வகித்தார்.  சர்வதேச விளையாட்டு வீரர் அண்ணாவி, பேராசிரியர் விக்டர் லாசரஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு புத்துண ர்வுக்கான பயிற்சிகள் மற்றும் விளக்கமளித்து பேசினர். நிகழ்ச்சியில் சிஐஎஸ்எப் பிரிவை சேர்ந்த 145 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

Related Stories: