திருத்துறைப்பூண்டியில் வி.சி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, அக்.11: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் ரவிக்குமாரை கொலை செய்யதிட்டமிட்டிருக்கும் பயங்கரவாத அமைப்பை தடை செய்ய வேண்டும். ரவிக்குமாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டமன்ற தொகுதி செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். ஆர்பாட்டத்தை விளக்கி கட்சியின் நாகை நாடாளுமன்ற செயலாளர் இடிமுரசு, மாநில துணை செயலாளர் பூமிநாதன் உள்ளிட்டோர் பேசினார்கள். இதில் திரளான வி.சி. கட்சி பிரமுகர்கள் கலந்து கொணட்னர்.

Related Stories: