முத்துப்பேட்டை, அக்.11: அம்மளர் ஈசிஆர் சாலை வளைவில் மாதக்கணக்கில் தேங்கி கிடக்கும் மழைநீர் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது.
முத்துப்பேட்டை அடுத்த எடையூர் ஊராட்சி அம்மளூர் கிழக்கு கடற்கரை சாலை வளைவில் ஏராளமான குடியிருப்புகள், கடைகள் உள்ளன. “எஸ்” வடிவிலான இந்த ஆபத்தான வளைவில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது.இதில் சாலையை ஒட்டி மேற்கு பகுதி சுமார் 100மீ தூரத்திற்கு மிகவும் தாழ்வாக உள்ளதால் மழை பெய்யும்போது மழைநீர் வடிய வழியின்றி மாதக்கணக்கில் தேங்கி சாலையையும் ஆக்கிரமித்துள்ளது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகனங்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளதால் அடிக்கடி இப்பகுதியில் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. அதேபோல் அப்பகுதியில் நடமாடும் மக்களும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.