டிஆர்இயூ எச்சரிக்கை திரு.வி.க.கல்லூரியில் போலீசை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், அக்.11:  கும்பகோணத்தில் அரசு கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீசாரை கண்டித்து திருவாரூரில் நேற்று அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். கும்பகோணத்தில் நேற்று முன்தினம்  அரசு கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீசாரை கண்டிப்பது. பல்கலை கழக தேர்வு கட்டண உயர்வினைரத்து செய்ய வேண்டும். குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும். நடப்பாண்டிற்கான பேருந்து பயண அட்டையினை விரைந்து வழங்க வேண்டும். தேர்வு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று திரு.வி.க அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி முன்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை செயலாளர் பிரகாஷ், மாவட்ட செயலாளர் சுர்ஜித் மற்றும் பொறுப்பாளர் மதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: