தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் அளித்த மனு: கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னதாக காணாமல்போன ராஜராஜசோழன் மற்றும் அவரது பட்டத்து இளவரசி லோகமாதேவி சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தமிழக அரசும், அறநிலையத்துறை போதிய ஒத்துழைப்பு தராமல் இருந்தும் சிலை தடுப்பு பிரிவை சேர்ந்த பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் திறம்பட செயல்பட்டு சிலைகளை மீட்டனர். சிலைகளை மீட்டவர்களை கவுரப்படுத்தும் வகையில் சதய விழாவில் தமிழக அரசு சார்பில் காவல்துறையினருக்கு பாராட்டு விழாவும், மத்திய, மாநில அரசு விருதுகளும் வழங்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக பொன்மாணிக்கவேலை நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.