பொதுமக்கள் மகிழ்ச்சி அக்னி ஆற்றில் மணல் கொள்ளை 3 லாரிகள், பொக்லைன் பறிமுதல்

ஒரத்தநாடு, அக். 11:  ஒரத்தநாடு அருகே அக்னி ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக 3 லாரிகள், பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரத்தநாடு தாலுகா நெய்வேலி அக்னி ஆற்றில் மணல் கொள்ளை நடப்பதாக அதிகாரிகள், போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நெய்வேலி கிராம நிர்வாக அலுவலர் பாக்யராஜ், வாட்டாத்திக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் மணல் கொள்ளை நடந்த இடத்துக்கு சென்றனர். அப்போது 3 லாரிகளிலும் மணல் அள்ளப்பட்டு பொக்லைன் இயந்திரம் நின்று கொண்டிருந்தது. இதையடுத்து 3 லாரி, பொக்லைன் இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிந்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம் மாணியவயலை சேர்ந்த முத்துகுமார் மற்றும் டிரைவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: