பட்டுக்கோட்டையில் உலக மனநல நாள் விழிப்புணர்வு பேரணி

பட்டுக்கோட்டை, அக். 11:  பட்டுக்கோட்டையில் தஞ்சாவூர் மாவட்ட மனநல திட்டம் சார்பில் உலக மனநல நாள் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து பேரணியை மாவட்ட மனநல அலுவலர் மங்கையர்கரசி துவக்கி வைத்தார். நாடிமுத்துநகர், பழனியப்பன் தெரு, மணிக்கூண்டு, சின்னையா தெரு, மைனர் பங்களா வழியாக வந்து மீண்டும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேரணி நிறைவடைந்தது.

பேரணியில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை ஏந்தி சென்றனர். பின்னர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கருத்தரங்கம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் சக்திவேல், மாவட்ட மனநல அலுவலர் மங்கையர்கரசி ஆகியோர் பேசினர். சாந்திவனம் ட்ரஸ்ட் மற்றும் மாவட்ட மனநல திட்ட ஊழியர்கள் மாணவர்களுக்கு மனரீதியான பாதிப்பு, போதை பழக்கவழக்கங்களால் உண்டாகும் தீமைகளை நாடகம் மூலம் நடத்தி காண்பித்தனர்.

Related Stories: