விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு

கும்பகோணம், அக். 11:  கும்பகோணம்- நீலத்தநல்லூர் சாலை காமராஜர் நகர் மெயின்ரோட்டில் விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மகாளய அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலவும் வறட்சி நீங்கி பருவமழை பெய்ய வேண்டியும், உலக நன்மைக்காகவும் பக்தர்கள் மகா சங்கல்பம் செய்து கொண்டனர். இதைெதாடர்ந்து மூலவர் மற்றும் 11 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர், நவக்கிரக சுவாமிகளுக்கு திருப்பதி வெங்கடாசலபதி போன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

Related Stories: