குடந்தை அரசு கல்லூரியில் வங்கி குழு தலைவர் பதவிக்கு நேர்முக தேர்வு

கும்பகோணம்,அக். 11: கும்பகோணம் அரசு ஆடவர் கல்லுாரியில் வங்கி குழு தலைவர் பதவிக்கான நேர்முகத்தேர்வு நடந்தது. கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் ஐடிபிஐ வங்கு குழு தலைவர் பதவிக்கான நேர்முகத்தேர்வு நடந்தது. முதல்வர் (பொ) சிவநேசன் தலைமை வகித்தார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். வேதியியல் துறை தலைவர் மீனாட்சிசுந்தரம், கணிதத்துறை பேராசிரியர் ரமேஷ் சிறப்புரையாற்றினர். இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 54 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

Related Stories: