ஐயப்ப சேவா சமாஜம் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, அக். 11: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிப்பதை கண்டித்து  தஞ்சை பனகல் கட்டிடம் முன் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில இணை செயலாளர் சிவராஜ்குருசாமி தலைமை வகித்தார். பாஜ மாவட்ட தலைவர் இளங்கோ, சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ் மாவட்ட தலைவர் சுந்தரராஜன், மாவட்ட அமைப்பு செயலாளர் குணாநிதி, தஞ்சை மாநகர மாவட்ட தலைவர் பால்ராஜ் முன்னிலை வகித்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மன உளைச்சல் ஏற்படுகிறது. எனவே ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதி அளிக்க கூடாது என்ற கோஷங்களை எழுப்பியும் சரணகோஷம் போட்டும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related Stories: