தமிழ்நாடு உழவர் பேரியக்கம் முடிவு தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது: தமிழக மக்கள் விடுதலை இயக்க முன்னணி வலியுறுத்தல்

சேதுபாவாசத்திரம், அக்.  11: சேதுபாவாசத்திரம் அடுத்த ரெட்டவயலில் தமிழக மக்கள் விடுதலை இயக்க முன்னணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அரசியல் செயலாளர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். பொது செயலாளர் தங்க குமரவேல் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கருத்துரிமைக்கு எதிராக செயல்படும் மத்திய, மாநில அரசுகளை கண்டிப்பது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 பேரை விடுதலை செய்யகோரி கவர்னருக்கு வரும் 17ம் தேதி 1,000 அஞ்சல் அட்டைகள் அனுப்புவது. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது. காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி வரும் 22ம் தேதி பேராவூரணியில் பிரசாரம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசியல் குழு உறுப்பினர்கள் விடுதலைமறவன், கேப்டன் அமல்ராஜ், முத்துப்பிரகாசம், தங்கசாமி, பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஈஸ்டர்ராஜ் பங்கேற்றனர்.

Related Stories: