கும்பகோணம், அக். 11: கும்பகோணத்தில் தஞ்சை புறநகர் மாவட்ட தமிழ்நாடு உழவர் பேரியக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. உழவர் பேரியக்க மாநில துணைத்தலைவர் கலியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ரமேஷ், உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் கோபு முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் தியாகபக்கிரிசாமி வரவேற்றார். தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி தலைமை வகித்தார். கூட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பாரபட்சமாக விவசாய கடன் வழங்குவதை கண்டிப்பது. கோட்டூர், திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்காததை கண்டிப்பது.