கும்பகோணம். அக். 11: கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி முன் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக துணைத்தலைவர் சகாதேவன் தலைமை வகித்தார். மண்டல தலைவர் ராஜராஜன் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் ரமேஷ், பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க விரைவில் ஆசிரியர்கள் நியமனம் வேண்டும். 2016ம் ஆண்டு முதல் எம்பில்., பிஎச்டி முடித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தர ஊதிய நிலுவைத்தொகை வழங்க வேண்டும்.