வாழைக்குறிச்சியில் மருத்துவ முகாம்

பொன்னமராவதி, அக்.11: பொன்னமராவதி  அருகே காரையூர் வட்டார மருத்துவமனையின் சார்பில் வாழைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொது மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் முத்துச்சாமி முன்னிலை வகித்தார். மருத்துவர்கள் ரவிக்குமார், அருண்குமார், சரண்ராஜ், இளங்கோவன், மாமுன்டி, ஷாலினி, சசிகுமார், ராஜ்குமார் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் 789 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கச்செல்வன், சுகாதார செவிலியர் சுமிதாஜான்சி, சுகாதார ஆய்வாளர்கள் ராமலிங்கம், ரவீந்திரன், உத்தமன் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் உட்பட பலர்

கலந்துகொண்டனர்.

Related Stories: