புதுக்கோட்டை, அக்.11: புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் கூறியதாவது: திருவரங்குளம் ஒன்றியம் கைக்குறிச்சி ஊராட்சி, கைக்குறிச்சியில் ரூ.2.82 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக்கிணறு அமைக்கும் பணி, கத்தக்குறிச்சி ஊராட்சி, பெரியநாயகிப்புரத்தில் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் பசுமை வீடு, ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் பிரதமமந்திரி திட்டத்தின்கீழ் வீடுகட்டும் பணி, தனிநபர் இல்ல கழிவறை, எஸ்.குளவாய்ப்பட்டி ஊராட்சி, எஸ்.குளவாய்ப்பட்டியில் ரூ.12.60 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை கட்டும் பணி,
ரூ.18.72 லட்சம் மதிப்பீட்டில் தவனேரிகுளம் தூர்வாருதல், பாலையூர் ஊராட்சி, பாலையூரில் ரூ.1.50 லட்சத்தில் மரக்கன்றுகள் மற்றும் பனைவிதை ஊன்றுதல், பேச்சேரி ஏ.டி காலனியில் ரூ.46.21 லட்சத்தில் தார்சாலை பணி,