ஆலங்குடி, அக்.11: ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகத்தை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா
திறந்து வைத்தார். ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகம் அமைப்பதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கி நடைபெற்றுவந்தது. இதனை சிஇஓ வனஜா நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். மத்திய அரசின் அடல் டிங்கரிங் ஆய்வகம் தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன்முதலாக ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு வருடத்திற்கும் ரூ.2 லட்சம் வீதம் 5 வருடத்திற்கு ரூ.10 லட்சம் பராமரிப்பு செலவுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அடல் டிங்கரிங் ஆய்வகம் ஏசி வசதி கொண்டதாகும்.