இலக்கிய மன்ற தொடக்க விழா

அரியலூர், அக். 11:  அரியலூர் ஒன்றியம் கருவிடச்சேரி நடுநிலைப்பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற விழா நடந்தது. தலைமையாசிரியர் கண்ணகிராணி தலைமை வகித்தார். மாணவர்களுக்கு அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தின் அவசியம் என்ற தலைப்பில் ஆங்கில ஆசிரியர் மரியசெல்வம் சிறப்புரையாற்றினார். பின்னர் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு குஞ்சிதபாதம் பரிசு வழங்கினார். மாணவி சந்தியா நன்றி கூறினார்.

Related Stories: