பெரம்பலூர், அக். 11: பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மனுதாரர், வக்கீல், பொதுமக்கள் வசதிக்காக இலவச தொடுதிரை கணினியை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாலராஜமாணிக்கம் திறந்து வைத்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் முதன்முறையாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மனுதாரர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் வசதிக்காக இலவச தொடுதிரை கணினி வசதி அமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்புற தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொடுதிரை கணினி வசதியை இலவசமாக பயன்படுத்தி வழக்கு விஷயமாக நீதிமன்றங்களுக்கு வருகை தரும் வழக்காடிகள், வழக்கறிஞர்கள், சாட்சிகள், பொதுமக்கள், தாங்கள் சம்மந்தப்பட்ட வழக்குகளின் நிலைமை, வாய்தா தேதி, எதிர்தரப்பு வழக்கறிஞர் போன்ற தகவல்களை தொடுதிரையில் வழக்கு எண், வழக்காடி பெயர், நீதிமன்றம் பெயர் ஆகியவற்றை பதிவு செய்து இலவசமாக அறிந்து கொள்ளலாம். பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், மாவட்ட மகிளா நீதிமன்றம், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்,