ஜெயங்கொண்டம், அக்.11: ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், வெத்தியார் வெட்டு கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல அரசு உயர்நிலைப்பள்ளியில் புதியதாக கட்டப்பட்டுள்ள அறிவியல் ஆய்வக கட்டிடத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து இப்பள்ளிக்கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி குத்துவிளக்கேற்றி, பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், உடையார்பாளையம் ஆர்டிஓ ஜோதி, துணை கலெக்டர் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை) கதிர்சங்கர், ஜெயங்கொண்டம் தாசில்தார் குமரய்யா மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.