வேதாரண்யம்,அக்.11: வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு வருகை தந்த மாவட்ட கல்வி அலுவலர் வேதரெத்தினம், ஆய்வு மேற்கொண்டு பின் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சுகாதாரம் பற்றியும் பள்ளியையும் நாம் இருக்கும் இடத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் குறித்தும் டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் அதன் விழிப்புணர்வு பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் கை கழுவுவதலின் அவசியத்தை எடுத்து கூறினார்.