கொள்ளிடம், அக்.11: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. கொள்ளிடம் ஒன்றியத்துக்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வரும் பிறந்த குழந்தை முதல் பதினெட்டு வயதுள்ள மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. முகாமில் 200 மாற்றுதிறன் கொண்ட மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர் பங்கு பெற்றனர். இதில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு அடையாள அட்டை, உதவி தொகை, பராமரிப்பு தொகை, இலவச பஸ் பயணச்சீட்டு ஆகியவைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.