நாகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது

நாகை, அக்.11: நாகையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து நாகை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை (12ம் தேதி) சென்னையை சேர்ந்த பிரபல நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளனர். மேலும் இந்த முகாமில் 10ம் வகுப்பு தேர்ச்சி, 12ம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ, ஐ.டி.ஐ. மற்றும் பட்டதாரிகள் இருபாலரும் 18 முதல் 27 வயதுடையவர்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: