மணல் கடத்தல்: 2 பேர் கைது

நாகை, அக்.11: நாகை ஈ.சி.ஆர். சாலையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்தபோது எந்த ஆவணமும் இல்லாமல் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரி ஓட்டி வந்த சுரேஷ் மற்றும் லாரி உரிமையாளர் நீலமேகம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Related Stories: