கரூர்,அக்.11: வெற்றிலை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கரூர் அருகே உள்ள புகழூர் வட்டாரத்தில் புகழூர், புங்கோடை, சேமங்கி, முத்தனூர், கோம்புபாளையம், திருக்காடுதுறை உள்ளிட்ட கிராமங்களில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வெற்றிலைகளை பறித்து சங்க மண்டி மற்றும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கு விவசாயிகள் விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர். வெற்றிலை கொள்முதல் விலை கடந்த வாரத்தை விட தற்போது குறைந்துவிட்டது.