ஓவியப் போட்டியில் அரசு பள்ளி மாணவி சிறப்பிடம்

க.பரமத்தி, அக்.11: மாவட்ட அளவிலான ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை பாராட்டி வாழ்த்தினர். வன உயிரின வார பாதுகாப்பு முன்னிட்டு கரூர் வனசரக அளவில் மாவட்ட அளவிலான ஓவிய போட்டி கரூரில் நடைபெற்றது. இப்போட்டியில் கார்வழி ஊராட்சி தொடக்க பள்ளியை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவி இளமதி கலந்து கொண்டு வெற்றி பெற்றார். சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் சான்றிதழ் மற்றும் கேடயம் வழினார். வெற்றிபெற்ற மாணவியை பள்ளி தலைமைஆசிரியர் வாசுதேவன், பள்ளி மேலாண்மை குழு தலைவர், கல்விக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

Related Stories: