கரூர், அக். 11: அரவக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், திறன்மேளா முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து ஊராட்சி ஒன்றிய அளவிலான திறன் மேளா மற்றும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது. 7வது கடடமாக 12ம்தேதி (நாளை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்தில் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் திறன்முகாம் மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள், தனியார் துறை நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். ஆட்டோமொபைல், தொலைத்தொடர்பு, வங்கி நிதி சேவை காப்பீடு, சில்லரை வர்த்தகம், டிராக்டர் ஆபரேட்டர், பேசிக் சீவிங் ஆபரேட்டர், சீவிங் மெஷின் ஆபரேட்டர், டிடிபி,