கரூர், அக். 11: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க கரூர் மாவட்ட பிரிவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் தமிழ்வாணன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல், பொருளாளர் ஜெயராம் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.