பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கரூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர், அக். 11: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க கரூர் மாவட்ட பிரிவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் தமிழ்வாணன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல், பொருளாளர் ஜெயராம் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.

அரசு திட்டப் பணிகளை நிறைவேற்றிட நெருக்கடியை கைவிட்டு கால அவகாசம் வழங்க வேண்டும். வளர்ச்சித்துறை பணிகளை பிற துறை அலுவலர்களை வைத்து கள ஆய்வுக்கு உட்படுத்துவதை கைவிட வேண்டும். இரவு நேர விடுமுறை தினங்களில் ஆய்வுகள் மற்றும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதை கைவிட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories: